Saturday, January 16, 2016

ஆனைக் கோயில் (கஜபிரஸ்தா)

கோயில் கட்டட அமைப்புகளில் ஏழுவிதமான விமானங்கள் சொல்லப்படுகின்றன. அந்த விமான அமைப்புகள் சிலவற்றை அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறுகிறார். அவ்விதமான அமைப்புக்களில் ஆலக் கோயில் அல்லது யானைக் கோயில் என்பதும் ஒன்று.

ஆலக் கோயில் என்றால் ஆனைக் கோயில். ஆனைக் கோயில் கட்டடங்களைக் கஜபிருஷ்ட விமானம் என்று சிற்பசாஸ்திரங்களில் பெயர் கூறப்படுகிறது. கஜபிருஷ்ட (கஜபிரஸ்தா) விமானக் கோயில்களாகிய ஆனைக் கோயில் கட்டங்கள் தொண்டைநாட்டில் (தொண்டை மண்டலத்தில்) தான் அதிகமாக இருக்கின்றன. சோழ நாட்டில் சில யானைக் கோயில்கள் மட்டும் இருக்கின்றன. பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தென் கன்னட மாவட்டத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பாக அமைந்திருக்கின்றன.

திருப்பாலை வனத்து ஆனைக் கோயிலின் அமைப்பு தனிப்பட்ட அமைப்புடன் அழகும் உடையது. மற்ற ஆனைக் கோயில்களின் அமைப்பைப்பார்த்துவிட்டு இந்தக் கோவிலின் அமைப்பைப் பார்த்தால் தான் இதனுடைய புதுமையான சிறப்பு நன்றாகத் தெரியும். மற்ற ஆனைக்கோவில்களின் அமைப்பைப் பாராதவர்கள் இந்தக் கோவில் கட்டட அமைப்பை மட்டும் பார்ப்பார்களானால் இதனுடைய அருமையும் பெருமையும் நன்கு அறியமாட்டார்கள். இந்தத் திருப்பாலைவனத்து யானைக் கோயில்போல அமைந்திருக்கிற இன்னொரு கோயில் காஞ்சிபுரத்துக்குத் தெற்கே மாகறல் என்னும் ஊரில் இருக்கிற சிவன் கோயில் கட்டடம் ஆகும். ஆனால், மாகறல் ஆனைக் கோயிலை விட திருப்பாலை வனத்து யானைக் கோயிலில் அழகான சிறப்புகள் இருக்கின்றன. இந்தக் கோவில், பிற்காலச் சோழர் ஆட்சியில் ஏறக்குறைய கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.




~ ஓம்நமசிவாய!

Friday, January 15, 2016

ஆலயப் பிரகாரம்

வெளிப்பிரகாரம்

வெளிப்பிரகாரத்தில் கொடிமரம் , பலிபீடம் மற்றும் நந்தி ஆகியன இராஜகோபுரத்திற்கு பிறகு உள்ளன.







அம்பாள் சன்னதி, பிரதான சன்னதிக்கு இடது புறத்தில் உள்ளார்ந்த பிரகாரத்துடன் கிழக்கு நோக்கி இருக்கும் சன்னதி.

பிரதான சன்னதிக்கு நுழைவாயில் தெற்கில் இருந்து நடராஜா சபா, நந்தி மற்றும் இடுப்பிடம் மண்டபம் உள்ளன.

பழமை வாய்ந்த திருபாலீஸ்வரர் சன்னதி.

விநாயகர், நாவலர், விஸ்வநாதர், மார்கண்டேயர் சிவலிங்கம், வீரபத்ரர், நாகர், பிட்சாண்டவர், வள்ளி மற்றும் தேவயானையுடன்  சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், சூர்யன் ஆகியோருக்கு உள் பிரகாரத்தில் சன்னதி.

~ ஓம்நமசிவாய!

Thursday, January 14, 2016

இராஜக்கோபுரம்

5 அடுக்கு இராஜக்கோபுரம்.

இராஜக்கோபுரதிற்கு முன்னே 16 கல் தூண் மண்டபம்.

மண்டபதிற்கு முன்னே அழகிய தெப்பக்குளம்.

தெப்பக்குளத்தில் ஒரு தவளைக்கூட இல்லாததன் பின்னே ஒரு சரித்திர காலக் கதை.

(அமிர்தம் குடித்துவிட்டு தேவர்கள் தங்கள் கைகளை குளத்தில் கழுவ முற்படுகையில், அசுரர்கள் தவளை வடிவத்தை எடுத்துக் கொண்டு அமிர்தம் பருக முயன்றுள்ளார்கள். அவர்கள் அமிர்தம் பருகுவதைத் தடுக்க கோவில் தெப்பக்குளத்தில் தவளை இருக்கா வண்ணம் தேவர்கள் சபித்தனர், அது இன்றளவும், இக்குளத்தில் தவளைகள் இல்லாமல்!)


~ ஓம்நமசிவாய!