Friday, December 22, 2017

திருக்கோவில் அமைவிடம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவேற்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. சென்னை செங்குன்றம் (Redhills) பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்திருத்தலத்தின் அருகில் நின்று செல்லும். மீஞ்சூர் மற்றும் பொன்னேரியிலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன. செங்குன்றத்திலிருந்து 558பி என்ற பேருந்து திருப்பாலைவனம் செல்கிறது. மேலும் 558, 558பி, 58சி, 56பி, 95 ஏ, சுந்தரம் 28 என்ற எண்ணுள்ள பேருந்துகளும் திருப்பாலைவனம் வழியாக செல்கின்றன.

திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை: 7.00 முதல் - 12.00 மணி வரையும்
மாலை: 4.30 முதல் - 8.30 மணி வரையும்.

தொடர்புக்கு:

விஷ்வபதி குருக்கள்: (+91) 96919 80505.

No comments:

Post a Comment