ஸ்ரீ லோகாம்பிகை உடனுறை திருபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரமோற்சவ விழா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கி, ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு பஞ்ச மூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ,பூஜைகள் மற்றும் காலை மாலை பூத, சிம்ம, காமதேனு வாகனம் மற்றும் ,அன்ன வாகனம் ,குதிரை வாகனத்தில் நாள்தோறும் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பங்குனி மாத பிரமோற்சவ முக்கிய விழாவான தேரோட்டம் ஆயிரக்கண பக்தர்கள் தேர் வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை லோகாம்பிகையுடன் திருபாலீஸ்வரர் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார்.
~ ஓம்நமசிவாய!